• Breaking News

    கடல்நீரை குடிநீர் ஆக்கும் நிலையத்தில் ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை...... அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்..... திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் அறிவிப்பு......


    திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணி செய்யும் 60 தொழிலாளர்கள்  தொடர் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 25.2.2007 கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் தொடங்கப்பட்டு கிராமப்புற இளைஞர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 60 பேர் பணியில் அமர்த்தபட்டனர். அதன்படி 15 ஆண்டுகளாக  தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் வாரியத்தின் திட்டத்திலிருந்து சென்னை வாட்டர் டிஷாலினேஷன் லிமிடெட் திட்டத்திற்கு நிலையம் மாற்றப்பட்டது.கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திட்டம் மாற்றப்பட்ட பிறகு அதிலிருந்து பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை.

    இது குறித்து தொழிலாளர்கள் சென்னை வாட்டர் டிசாலினேஷன் லிமிடெட் அதிகாரியிடம் கேட்கும் போது இத்தொகையினை சென்னை குடிநீர் வாரியமே உங்களுக்கு அளிக்கும் என கூறியுள்ளனர்.பின்னர் சென்னை குடிநீர் வாரியத்திடம் கேட்கும் போது சென்னை வாட்டர் டிசாலினேஷன் லிமிடெட் உங்களுக்கு இதை அளிக்கும் என மாறி மாறி தொழிலாளர்களை அலைகழித்துள்ளனர்.இதனால் ஏற்கனவே தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழிலாளர்கள் ஒருநாள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.அப்போது சமரசம் பேசிய அதிகாரிகள் விரைவில் இதற்கு தக்க தீர்வு காணப்படும் என நம்பிக்கை அளித்தனர்.ஆனால் இதுநாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் இதற்காக எடுக்கப்படவில்ல என ஆத்திரமடைந்த தொழிலாளர்கள்  தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     இதற்கு தமிழக அரசு எந்தவித செவி சாய்க்கவில்லை இந்த நிலையில் காட்டுப்பள்ளி அதிமுக பிரமுகர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் போராட்டக் குழுவினர் சந்தித்தனர் அப்போது பேசிய அவர் விரைவில் கழக பொதுச் செயலாளரை சந்தித்து அவர்கள் மூலமாக அனுமதி பெற்று அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம்  நடத்தப்படும் என அப்போது அவர் தெரிவித்தார். இந்த விடியா அரசு தொழிலாளர்களின்  நலனில் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டுவதை தோல் உரிக்கும் விதமாக போராட்டம் நடத்தப்படும் என  தெரிவித்தார்.

    No comments