நாகை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு அன்னதானம்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி மேலக்கரையிருப்பு கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா 05/052025 திங்கட்கிழமை பங்குத்தந்தை ஜிவி பன்னீர்செல்வம் அடிகளார் திருக்கரங்களால் திருக்கொடி ஏற்றப்பட்டது.
13/05/2025 இரவு மின் அலங்கார தேர்பவனி நடைபெற்ற நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாகை மாவட்ட கழகச் செயலாளர் மா. சுகுமார் அறிவுறுத்தலின்படி, நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் சிக்கல் அ.ஞானப்பிரகாசம் ஏற்பாட்டில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது .இதில் ஒன்றிய இணைச் செயலாளர் தளபதி வினோத்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிக்கல் இள.நடராஜன்,மாவட்ட மகளிரணி ஜான்சி, ஊராட்சி நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர், அமுல்,கஸ்பர்,அருள்தாஸ்,ஜெயின், ஆரோக்கியராஜ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அன்னதான நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 97 88 34 18 34
No comments