திருவள்ளூர்: அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் திறந்து வைத்தார்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி.சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், மற்றும் பொன்னேரி தொகுதி பார்வையாளர் தமிழ் க. அமுதரசன், ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளெரி, மற்றும் பழம், கீரை, ஐஸ்கிரீம், உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன்,தலைமைபொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து. தமிழரசன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments