திருவள்ளூர்: வட காஞ்சி என்று அழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் தேரோட்டம்..... பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வட காஞ்சி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் உடனுறை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் 10 நாள் பிரமோற்சவத்திற்கான கொடியேற்றம் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரமச்சிவத்தின் ஏழாம் நாளான என்று திரு தேரோட்டம் நடைபெற்றது, அப்போது அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் எழுத்துச் செல்ல முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். முன்னதாக தேர் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் அவரது துணை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு இடங்களிலும் தன் ஆர்வலர்கள் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் அதிமுக.வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம்.பி பலராமன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி டாக்டர் விஜயராகவன் முன்னாள் சேர்மன் ரவி. மற்றும் கோவில் நிர்வாகிகள் அறநிலை துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments