அத்திப்பட்டில் பாஜக சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது..... தேசப்பற்றுடன் சிலம்பாட்டம் ஆடியபடி அணி திரண்ட பள்ளி மாணவ மாணவிகள்......
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திபட்டில் பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பாலயா எஸ். சிவக்குமார் ஏற்பாட்டிலும், மாவட்டத் தலைவர் எஸ். சுந்தரம் முன்னிலையில், ஒன்றிய தலைவர் டி. யூ. பிரபு தலைமையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய துப்புரவு தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவர் எம். வெங்கடேசன், மாநில அரசு தொடர்பு தலைவர் எம். பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளி மாணவ மாணவிகளுடன் மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அணி வகுத்து சென்றனர்.
அப்போது தேசப்பற்றுடன் இளைஞர்கள் சிலம்பாட்டம் ஆடியபடி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்பாலயா சிவகுமார் கல்வி உபகரணங்கள் வழங்கினார், முன்னதாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையையும், நடுவன் அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் பொதுவெளியில் தொலைக்காட்சி பெட்டியை பாஜகவினர் வைத்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் கே. ஜி. எம். சுப்பிரமணி, செயலாளர் சந்துரு, ஒன்றிய பொருளாளர் சத்யன், செல்வராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments