நாகையில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் லேசான சாரல் முதல் மிதமான மழை மட்டுமே பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது 6 மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான காற்று வீசத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக இடி மின்னலோடு கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
குறிப்பாக கீழ்வேளூர்,கூத்தூர்,ஆழியூர், பட்டமங்கலம், தேவூர்,வெண்மணி,சாட்டியக்குடி,வலிவலம், திருக்குவளை, தலைஞாயிறு, விழுந்தமாவடி, காமேஸ்வரம், வேளாங்கண்ணி, புத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக தாழ்வான பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன்
No comments