திருவள்ளுர்: எடப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு லக்ஷ்மியம்மன் ஆலயத்தில் ஒரு ஆண்டு முன்னிட்டு சங்கு அபிஷேகம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் சோம்பட்டு ஊராட்சி எடப்பாளையம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மியம்மன் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பூர்த்தி செய்யும் வகையில் குருக்கள் முரளி ஐயர் தலைமையில் சங்கு அபிஷேகம் நடந்தேறியது சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.
இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக லட்சுமி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதில் எடப்பாளையம் பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டு லட்சுமி அம்மனை.வழிபட்டனர்.
No comments