• Breaking News

    கிளிக்கோடி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கிளிக்கோடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் மிகவும் பழமையானது இத்திருக்கோவிலை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இத்திருத்தலத்தின்  கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன.

     அதனைத் தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி கணபதி ஹோமம் ,நவகிரக ஹோமம், கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து இறுதி நாளான இன்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    அப்போது குடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது  .   நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளிக்கோடி கிராம மக்கள் செய்திருந்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    No comments