• Breaking News

    நாகை: அதீத கோடை மழையால் எள் சாகுபடி பாதிப்பு


    தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் P. கமல் ராம் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக எள் சாகுபடி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போதைய தீவிர மழையினால் எள் சாகுபடி மேற்கொள்ளபட்ட வயல்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் எள் பயிர் அழுக தொடங்கியிருப்பது விவசாயிகளிடையே கவலையையும் மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

     குறிப்பாக வேதாரண்யம் வட்டாரத்தில் கரியாபட்டினம், வாய்மேடு, மருதூர் பகுதிகளும் தலைஞாயிறு சுற்று வட்டார பகுதிகளான திருமாளம், அக்ரஹாரம் , வடுகூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் சுமார் 750 ஏக்கர் எள் சாகுபடி பேரழிவை எதிர்கொண்டுள்ளது.

    கடந்த குறுவை சாகுபடி ஏறக்குறைய கைவிடபட்ட நிலையிலும், எதிர்பார்க்கபட்ட சம்பா சாகுபடி பருவம் தவறிய மழையினால் பாதிக்கபட்ட போதும் உரிய நிவாரணம் இதுவரை கிடைக்காத சூழ்நிலையாலும், கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ள விவசாயிகள் மீண்டும் இந்த பாதிப்பினால் செய்வதறியாது வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த அசாதாரண சூழ்நிலையால் எதிர்நோக்கியுள்ள குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    எனவே நாகை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டு , வேளாண்மைதுறை மூலம் உரிய கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு உரிய இழப்பிடு கிடைக்க ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.


     கீழ்வேளூர் தாலுகா நிருபர்  த. கண்ணன்

    No comments