பாவூர்சத்திரம் அருகே முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழா, திருவிளக்கு பூஜை நடைபெற்றது
பாவூர்சத்திரம் அருகே சின்னதம்பிநாடார்பட்டி முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பிநாடார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீராமசாமி, முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீமுப்புடாதி அம்மன், ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் வில்லிசையும், 2ம் நாளில் மதியம் சிறப்பு பூஜை, அன்னதானமும் நடைபெற்றது. 3 ம் நாளில் வில்லிசை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
4ம் நாளான நேற்று காலை குற்றாலம் புனித நீர் பவனி வருதலும், மதியம் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு தொழிலதிபர் வைரசாமி; சேலைகள் வழங்கினார். தொடர்ந்து மாவிளக்கு எடுத்துவருதல், சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
No comments