• Breaking News

    ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

     


    விருதாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை டிரைவர் முருகன் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் நெய்வேலி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்குள்ள பாலத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் இருந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

    தூக்கி வீசப்பட்டவர்கள் பாலத்தின் கீழ் விழுந்து பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டு அரசு பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments