• Breaking News

    சமூக விரோத கும்பலால் மீண்டும் ஒரு யாதவ இளைஞர் வெட்டிக்கொலை..... டி.ஜி.பி நேரிடையாக தலையிட பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்......

     


    பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    இராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஒன்றியம் மேட்டு வேட்டாங்குளம் கிராமத்தில் வசிக்கும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்தவர் கோபால் பிள்ளை என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி  என்பவர் 21.05.25  புதன் கிழமை காலை 7 மணியளவில் நடுரோட்டில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த படுபாதக செயலில் வெள்ளை குட்டை  பார்த்தசாரதி மகனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து  அரங்கேற்றியுள்ளனர்.இவர்கள் எல்லோரும் கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களாம்.

    இதே நெமிலி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் சமூக விரோதிகளால் தமிழரசன் என்ற யாதவ இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார் அந்த ஈரம் காய்வதற்குள்ளயே சமூக விரோதிகளால் தற்போது தட்சிணாமூர்த்தி படுகொலை செய்யபட்டுள்ளார் வேதனையான விசயம் யாதவ சமுதாயத்தினை சேர்ந்தவர்களே தொடர்ந்து கொல்லப்படுவதை பார்க்கும் போது பொதுவாகவே இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அதுவும் உளவுத்துறையின் செயல்பாடுகள் அறவே இல்லை என்றே தோன்றுகின்றது.தமிழகத்தில் கொலைகள் எல்லாம்  குறைந்து விட்டதாக  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் இரண்டு நாள் முன்புதான் அறிக்கை கொடுத்தார்கள் அதற்குள் இப்படியாகிவிட்டது.

    சமூக விரோத கும்பல்களாலேயேதான் தமிழரசனும் தட்சிணாமூர்த்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.இனி இதுபோன்ற சம்பவம் ஏதேனும் நடந்தால் யாதவ சமுதாயம்  கைக்கட்டி வேடிக்கை பார்க்காது.

    உடனடியாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனரோ அல்லது கூடுதல் காவல்துறை இயக்குனரோ இராணிப்பேட்டை மாவட்டத்துகு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி குடும்பத்துக்கு நியாயம்- நீதி கிடைக்கவும் செய்யவேண்டும்.

    அதேநேரம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் அசால்ட்டாக கொலை சம்பவங்களை அரங்கேற்றும் சமூக விரோத கும்பல்களை அடியோடு ஒழிக்க வேண்டும்.

    இனி சமூக விரோத கும்பல்களால் எந்த ஒரு சமுதாயத்தினரும் இங்கு மட்டுமடுமல்ல எந்த மாவட்டத்திலும் பாதிக்கப்பட கூடாது.அதற்கான உறுதியான நடவடிக்கையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும்,கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனரும் ஈடுபடவேண்டும்.என்று பாரத முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

    இவ்வாறு பாரதராஜா யாதவ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

    No comments