கும்மிடிப்பூண்டி: புதிய தொழிற்சாலையை திறந்து வைத்தார் தொழில் துறை அமைச்சர் தாமு அன்பரசன், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்
திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் அமரம்பேடு கிராமத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருவான சதர்ன் அலாய் ஃபவுண்டரிஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
உடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் அசன்மௌலானா ஒன்றிய செயலாளர் மணிபாலன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துமற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் தொழில் நிறுவனத்தின் அதிகாரிகள்பொதுமக்கள் என கலந்து கொண்டனர் .
No comments