• Breaking News

    சோழவித்யாபுரத்தில் "உழவரைத் தேடி- வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்" துவக்கம்


    திருக்குவளை,கீழையூர் அருகே சோழவித்யாபுரம் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.தமிழக முதல்வர் வேளாண்மை துறையில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை என்ற திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

    கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட  நிகழ்ச்சிக்கு கீழையூர் வட்டார ஆத்மா தலைவர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்து  விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்.முன்னாள் கீழையூர் வட்டார ஒன்றிய குழுத் தலைவர்  மு‌.ப.ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம்- கீழ்வேளூர் ஆகிய துறைகளிலிருந்து அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களுடைய துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் உயிர் உர விதை நேர்த்தி செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.மேலும் வேளாண் இடுபொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் விளக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு விவரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.  உள்ளிட்ட முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வேளாண் துறை அலுவலர்கள், வருவாய்த் துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழையூர் வட்டார வேளாண்மை துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.இதேபோல வேட்டைக்காரனிருப்பு கிராமத்திலும் நடைபெற்றது.

    கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்


    No comments