நாகை அருகே வடக்காலத்தூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வைகாசி உற்சவ திருவிழா; 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூரில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி உற்சவ திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறுவது வழக்கம். இந்த ஆண்டின் வைகாசி உற்சவ திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைப்பெற்று.
வீதி உலா காட்சிகள் நடைப்பெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழச்சியான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருள சக்தி கரகம் பூக்குழி இறங்க தொடர்ந்து விரதமிருந்து காப்புக்கட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து முத்துமாரியம்மன் மற்றும் பிடாரியம்மன், வீரகாளியம்மன், வெங்கடேச ஐயனார், மன்மதன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
No comments