கும்மிடிப்பூண்டி அருகே 1000 ஆண்டுகள் பழமையான காசிக்கு நிகராக போற்றப்படும் அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூத்தீஸ்வரர் திருக்கோவிலில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரியதுரை கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிக்கு நிகராக போற்றப்படும் அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில்வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களாக நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் வரமுத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் காட்சியளித்தார்.
பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் செயலாளர்கள் சரவணன் குருக்கள் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments