பொலவக்காளிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்திட அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, கோபி வடக்கு ஒன்றியம் , பொலவக்காளிபாளையம் ஊராட்சி , வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்திட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் ,வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் , செயற்பொறியாளர் முருகேசன் , மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேணுகாதேவி , ஒன்றிய துணை செயலாளர் அமராவதி , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் , ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகநாதன் , செந்தில்குமார், சின்னப்பன், மோகன்ராஜ் , தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்தி , சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments