கடுக்காம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டிட அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி, கோபி வடக்கு ஒன்றியம், கடுக்காம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 31இலட்சத்து 40ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் முருகேசன் அவர்கள், சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு ராஜேந்திரன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகநாதன், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன்,சாமிநாதன், தர்மராஜ், வீரன், துரைசாமி, பெருமாள்சாமி, கோவிந்தராஜன், திருமூர்த்தி, சரவணன், கருப்பண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments