• Breaking News

    பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த தம்பதி

     


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராசாம்பாளையம் டோல்கேட் அருகே ஒரு வீட்டில் ரவி மற்றும் அவரது மனைவி வாசுகி ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்த நிலையில் திடீரென துர்நாற்றம் வீசியது. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அவர்கள் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

    இதனால் அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments