• Breaking News

    கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் அங்கன்வாடிக்கு உபகரணங்களை பேரூராட்சி தலைவர் ராஜன் வழங்கினார்


    முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் அங்கன்வாடிக்கு உபகரணங்களை பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் வழங்கினார்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் ஏற்பாட்டில்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூர் அங்கன்வாடிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.  கீழப்பாவூர் மாதாகோவில் தெருவில் உள்ள அங்கன்வாடியில் இருக்கைகள், குக்கர் , பாய் உள்ளிட்ட உபகரணங்களை பேரூராட்சி தலைவர் ராஜன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, துணை செயலாளர் முருகன், முன்னாள்  பேரூர் செயலாளர் ராமசாமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள், ஒன்றிய பிரதிநிதி மலைச்சாமி, பேச்சாளர் தமிழ்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர் இசக்கிமுத்து, வார்டு செயலாளர்கள் நரசிங்கம், மாடசாமி, மாரியப்பன், பாலமுருகன், பாரதிராஜா, குத்தாலிங்கம், சுடர்ராஜ், நாகராஜ், கிருஷ்ணசாமி, விஜயகண்ணன், அர்ச்சுணன், மாரிசெல்வம், மாரியப்பன், ரவிச்சந்திரன், மாயாண்டி, சரவணன், மகாராஜன், பூங்குன்றன், ராமசாமி, அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    No comments