புதுக்கோட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திடல் தொழுகை
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி, வெட்டிவயல், கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப் பட்டினம், வடக்கம்மாபட்டினம், அம்மாபட்டினம் கிளை-1 கிளை-2, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலை 7 மணியளவில் திடல் தொழுகை நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர்கள் சிறப்புரையாற்றினர்.
இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு ஆண்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
No comments