• Breaking News

    திருக்குவளை அருகே ஆகாச கழனியப்பர் அய்யனார் ஆலய வைகாசி திருவிழா


    நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா நத்த பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பியவேளூரில் ஸ்ரீ பூர்ணாம்பிகா புஷ்களாம்பிகா சமேத ஆகாச கழனியப்பர் அய்யனார் ஆலயம் வைகாசி திருவிழா கடந்த ஜூன் 10ஆம் தேதி காப்பு கட்டுதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா மற்றும் காவடி  எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.


     தொடர்ந்து ஜூன் 24 செவ்வாய்க்கிழமை  சுவாமிக்கு  பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திரையிசை தெம்மாங்கு பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த. கண்ணன் 


    No comments