• Breaking News

    சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா..... தென்காசி மாவட்டத்திற்கு 7ந்தேதி உள்ளுர் விடுமுறை..... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


    சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு 7ந்தேதி உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 7ந்தேதி (வியாழக்கிழமை)  நடைபெறவுள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்;ளுர் விடுமுறை நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளுர் விடுமுறை பொருந்தாது. வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. ;மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.23ந்தேதி சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    No comments