ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 2, 2025

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

 


சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது.


இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 4-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும். 5-ந் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.


தொடர்ந்து 7-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4, 5, 6 ஆகிய 3 நாட்கள் அய்யப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும். ஓணத்தையொட்டி, சபரிமலை சன்னிதானத்தில் பிரமாண்ட அத்தப்பூ கோலம் அமைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment