ஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் 29.10.2025 மற்றும் 30.10.2025 - இரண்டு நாட்களாக இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் R.D. இன்டர்நேஷனல் CBSE பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபெற்று ஆர்வமாக விளையாடினர்.
ஆண்கள் பிரிவில் வாலிபால் போட்டியில் அக்னி சிறகுகள் விளையாட்டு மன்றம் முதல் இடத்தையும், R.D இன்டர்நேஷனல் CBSE பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. பெண்கள் பிரிவில் கயிறு இழுத்தல் போட்டியில் R.D. இன்டர்நேஷனல் பள்ளி முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர், மை பாரத் ஒருங்கிணைப்பாளர்கள் கோப்பைகள், மெடல்கல், வழங்கினர். பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வெற்றி பெற்ற அனைவரும் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டியில் பங்கு பெற உள்ளனர். N. கலைச்செல்வன், M. ராஜ்குமார், S. ஷோபனா, S. சௌந்தர்யா மற்றும் N. கதிரவன் அவர்களுடன் இணைந்து பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் இந்த போட்டியினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்.
செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வெளியிட தொடர்புக்கு
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகள் ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471,6382211592 .













0 Comments