திருக்குவளை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா..... 41வது நாள் சிறப்பு பூஜை

 


நாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட பாங்கல் ஊராட்சி முள்ளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மண்டலாபிஷேக விழாவின் 41வது நாள் நிகழ்ச்சிகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றன.கோயில் பூசாரி  பாங்கல் ஹரிஹர சிவாச்சாரியார் தலைமையில் அம்மனுக்கு 14 வகை திடீர் எங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து குங்குமம் மற்றும் சொர்ண அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது. அலங்காரத்துடன் காட்சியளித்த அம்மனை தரிசிக்க பக்தர்கள் திரளாகக் கூடியிருந்தனர்.அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனையின் போது பக்தர்கள் “அம்மன் தாயே” என பக்தி முழக்கங்களுடன் கலந்து கொண்டு அருள்பெற்றனர். விழா முழுவதும் ஆன்மிக ஒளி பரவியிருந்தது.

விழாவின் முக்கிய அம்சமாக அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு மதிய உணவு அன்புடன் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இன்றைய விழாவிற்கான உபய ஏற்பாடுகளை எஸ்.கே. பார்த்திபன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மண்டலாபிஷேக விழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குவளை செய்தியாளர் தா.கண்ணன்


Post a Comment

0 Comments