பொன்னேரியில் அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமனுக்கு மேற்கு ஒன்றியத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்



திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரும்  சிறுணியம் பலராமனை ஆதரித்து  மா.பா. பாண்டியராஜன் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் குமார் முன்னிலையில் கொடூர்  தடப்பரம்பாக்கம்  வன்னியம்பாக்கம் ஏலியம்பேடு காட்டவூர்   ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய  அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடியார் செய்த பணிகள் குறித்தும்  தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை என நடைபெற்று வருவதாகவும் இந்த திமுக அரசின் மீது கடுமையான விமர்சனத்தில் முன்வைத்த அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



 இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பானுபிரசாத்  மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மஜா  ஜனார்த்தனன்  முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ண பிரியா வினோத்  மகளிர் அணி மாவட்ட இணைச் செயலாளர் சியாமளா  தசரதன் ரவி பொன்னுதுரை ஜெயம் ரமேஷ் சுதாகர்  சம்பத் துர்கா பிரசாத் ஆறுமுகம் தமிழரசன் சதா உள்ளிட்ட  கூட்டணி கட்சி  நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments