நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இன்று “We The Leaders” இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தன்னார்வலர் திருக்குவளை திருமால்வளவன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருக்குவளையைச் சேர்ந்த முத்துக்குமரன் விஜயகுமார் உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டனர். முகாமில் சுமார் 50 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக வேதாரண்யம் தொகுதி இராம வைரமுத்து,நாகை தொகுதியை சேர்ந்த ஆறுமுகம், ராஜேஷ், ஏ.ஆர்.பி. பாலாஜி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




0 Comments