மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டத்தில் உள்ள 75 நியாய விலை கடைகளுக்குட்பட்ட குடும்ப அட்டைகளுக்குண்டான குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் வழங்கும் பணியானது முதற்கட்டமாக குத்தாலம் வட்டத்தில் மங்கநல்லூர் மற்றும் பாலையூர் சரகத்திற்குட்பட்ட 46 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை கலெக்டர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் இணையத்தில் சரியாக பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்திட உத்தரவிட்டார்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தனி வட்டாட்சியர் ராகவன், குத்தாலம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாபு, பாலையூர் சரகத்திற்குட்பட்ட மாந்தை மற்றும் நக்கம்பாடி ஆகிய கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்தார். ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் மற்றும் டெக்னிகல் உதவியாளர் குருபிரதாப் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment