கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி லக்கம்பட்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா வின் 115 வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி லக்கம்பட்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா வின் 115 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:
திராவிட இயக்கம் தான் என்றைக்கும் தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும் இயக்கம் என்பதை உறுதிபடுத்தியவர் அண்ணா. அவர் அமெரிக்காவில் ஆற்றிய முக்கால் மணி நேர உரையின் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் அண்ணா . அவர் வழியில் வந்தவர் தான் எம் ஜி ஆர்.அவர் ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களுக் காக நிறைவேற்றினார்.
கோபி தொகுதி என்னை வாழ வைத்த மண், கோபி தொகுதி மக்களுக்காக என் உயிரை பணயம் வைக்க கூட தயாராக உள்ளேன். பெண்கள் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை நிறைவேற் றினார்.
ஆறு மொழிகள் பேசக்கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா,அவரது ஆட்சி காலம் பொற்காலம் என்று சொல்ல கூடிய அளவிற்கு ஆட்சியை நடத்தி காட்டினார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து உள்ளது, வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது,பால் விலை உயர்ந்துள்ளது, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளது.
ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றாமல் நல்லாட்சி நடத்தி காட்டினார் எடப்பாடி பழனிசாமி, இன்றைய சூழலில் ஆட்சியை மாற்ற நேரம் எப்போது வரும் என மக்கள் எதிர் பார்த்து கொண்டுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் இல்லாவிட்டாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கோட்டையில் அமரும் என்றார்.கூட்டத்தில் பவானிசாகர் எம் எல் ஏ பண்ணாரி.முன்னாள் எம் பிகள் காளியப்பன்,சத்தியபாமா, முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன், யூனியன் சேர்மன் மெளதீஸ்வரன்,ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி,வேலுமணி,குறிஞ்சிநாதன்,நகர கழக செயலாளர் பிரினியோ கணேஷ், மாவட்ட இணை செயலாளரும் மாவட்டத் திட்ட குழு உறுப்பினருமான கவுன்சிலர் அனுராதா லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி ரவிச்சந்திரன், கோபி நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் முத்துரமணன், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் அருள் ராமசந்திரன்.இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவர் சி பி ஜெட் கார்த்தி,ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துகுமார். பாண்டுரங்கசாமி,ஆசிரியர் வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .
No comments