விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள அக்கரைபட்டியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் கனகலட்சுமி தம்பதியினர்.
இருவரும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் யோகேஸ்வரன் (16). இவர் வெம்பக் கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பள்ளி முடிந்த பின்பு தனது நண்பர்களுடன் வெம்பக்கோட்டையில் உள்ள அணையில் குளிக்க சென்று உள்ளார்.
இந்த நிலையில் யோகேஸ்வரன் அணையில் உள்ள ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் முழ்கி உள்ளார்.
யோகேஸ்வரன் நீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் உடனடியாக வெம்பக்கோட்டை காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்பக்கோட்டை காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய பள்ளி மாணவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் தீயணைப்பு துறையினரின் பல மணி நேர நீண்ட தேடுதலுக்கு பின்னர் பள்ளி மாணவன் யோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீரில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment