• Breaking News

    வாங்கல் நெரூர் பகுதியில் மணல் குவாரிகள் அமைக்க வன்னிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பொதுமக்கள் விவசாயிகள் எதிர்ப்பு


    கரூர் மாவட்டத்தில் வாங்க தனியார் திருமண மண்டபத்தில் கடந்த வாரம் நீர்வளத்துறை சார்பாக வாங்கல் பகுதியில் மூன்று இடங்களில் மணல் குவாரிகள் அமைக்க பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் மணல் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட கருத்து கேற்பு கூட்டம். ஒரு கண் துடைப்பு நாடகம் என்று கருதியா அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஏற்கனவே அப்பகுதியில் மணல் குவாரி அமைத்து பத்து ஆண்டுகளில் எடுக்க வேண்டிய மணலை 6 மாத காலத்திற்குள் எடுத்த நிலையில் அங்கு விவசாய நிலத்திற்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நெரூர் வடபாகம் மற்றும் அர்ச்சனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரிகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


    இதனைத் தொடர்ந்து வன்னிய மக்கள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கரூர் மாவட்ட வன்னிய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கி. சிதம்பரம் தலைமையில் வாங்கல் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

    உடன் கரூர் மாவட்ட வன்னிய மக்கள் கட்சியின் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் காவிரி படுகை விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.


    கரூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்

    93857-82554

    No comments