கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை
கரூரில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். மணல் குவாரியில் இருந்து அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்து அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த மாதம் மணல் குவாரி, மணல் கொள்ளை, சட்டவிரோத சுரங்க முறைகேடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த நிலையில் இன்று கரூர் மல்லம்பாளையம் மணல் குவாரி பகுதிக்கு சுமார் நான்கு கார்களில் மத்திய பாதுகாப்பு படைத்துறையினரின் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறையினர், குவாரியில் அள்ளப்படும் மணல் அளவு குறித்து, பிரிவு ஆய்வில் ஈடுபட்டு சோதனை நடத்தினர். ஏற்கெனவே தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரி அதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து கரூரிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மணல் அள்ளும் அளவு குறித்து கணக்கிட தொழில்நுட்ப வல்லுநர்களும் வந்துள்ளனர்.
No comments