கோவை மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார். கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கார்களில், நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பினர். அவர்களை நேரு நகர் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீஸார், 50க்கும் மேற்பட்ட கார்கள் செல்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறினர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸார் நாம் தமிழர் கட்சியினரின் வாகனங்களை தடுத்து நிறுத்தியதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஐந்து, ஐந்து வாகனங்களாக அனுப்பி வைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
No comments:
Post a Comment