பொன்னேரி அருகே அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஸ்ரீ தர்மராஜா சுவாமி ஆலய தீ மிதி திருவிழா..... 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்திகடனை செலுத்தினர் - MAKKAL NERAM

Breaking

Sunday, May 26, 2024

பொன்னேரி அருகே அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஸ்ரீ தர்மராஜா சுவாமி ஆலய தீ மிதி திருவிழா..... 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்திகடனை செலுத்தினர்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  அருகே  பள்ளிபாளையம்  கிராமத்தில் அருள்பாலிக்கும்  அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஸ்ரீ தர்மராஜா சுவாமி   ஆலயத்தில்  பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பல்வேறு  வாகனங்களில் எழுந்தருளி  அருள் பாலித்தார்.

10-ஆம் நாளான இன்று   அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மன்  அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.அதனை தொடர்ந்து  300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் பொன்னேரி ,கும்மிடிப்பூண்டியை சேரந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment