புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் கோவில் 27வது ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயம் காலை மற்றும் மாலை என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் காலை பிரிவில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு, சிறிய குதிரை என நான்கு பிரிவுகளாகவும், மாலை பிரிவில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, சிறிய குதிரை என நான்கு பிரிவுகளாகவும் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் முருகன் தலைமையில் காலை நடைபெற்ற பந்தயத்தில் புதுக்கோட்டை, மதுரை,தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட ஜோடி மாட்டு வண்டிகளும், 15- க்கும் மேற்பட்ட குதிரைகளும் கலந்து கொண்டன.
மாட்டு வண்டி ஜோடிகள் நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்து ஒன்றையொன்று முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. போட்டியைக்காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ஜோடிகளையும் அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூபாய் 3 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
No comments