பொன்னமராவதி அருகே ஆலவயல் கிராமத்தில் சர்வதேச விதைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வில் ஈடுபட்ட புஷ்கரம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் சர்வதேச விதைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வில் ஈடுபட்ட புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள்.புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் தங்களின் கிராம தங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆலவயல் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சர்வதேச விதைகள் முன்னிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி இந்தாண்டின் முக்கிய கருத்தான உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல் மற்றும் உயிர்ப்பித்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் கலந்து கொண்ட விவசாயிகள் நாட்டு ரகங்களை விதைத்து உற்பத்தி செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.மேலும் மாணவிகள் நாட்டு ரகங்களின் நன்மைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விதைக்கும் முறைகள் பற்றியும் விளக்கி கூறினர். இந்நிகழ்வில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ரித்திகா,ரித்திஶ்ரீ, சர்மிளா, சரஸ்வதி, சிவப்பிரியா, ஸோபிகா, சிந்து, சிவரஞ்சனி, சினேகா, சுபபாரதி, சுபாஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments