• Breaking News

    அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோயில் பகுதிகளில் 13 ம் தேதி மின்நிறுத்தம்


     நாகுடி, கொடிக்குளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி,  அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், ஆவணத்தான் கோட்டை , மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, அம்பலவானேந்தல், ஆவுடையார்கோயில், நாகுடி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், ஏம்பல், வல்லவாரி,  அறந்தாங்கி, அழியாநிலை, சிலட்டூர், குரும்பூர், மறமடக்கி, ஆளப்பிறந்தான், கம்மங்காடு, துரையரசபுரம், ஆவனத்தான்கோட்டை, கீரமங்கலம், மறமடக்கி  ஆகிய பகுதிகளில் வரும் 13ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும் அறந்தாங்கி மின்வாரிய  செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.





    No comments