தூத்துக்குடி மக்களவைத் தொகுதில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்த கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர். கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று, 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை தோற்கடித்தார்.
மேலும் 1,22,380 வாக்குகளுடன் தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன் மூன்றாவது இடத்தையும் 1,20,300 வாக்குகள் பெற்று நாதக ரௌனா ரூத் ஜெனி நான்காவது இடத்தையும் பிடித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment