தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 28, 2024

தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மேற்கு பகுதி தேமுதிக சார்பில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதி கழகச் செயலாளர் மார்க்கெட் ஞானப்பால் அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளர் மா.செழியன் கலந்துகொண்டு ஜி.எஸ்.டி சாலையில் விஜயகாந்த் அவர்களுடைய கல்வெட்டு இடத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி அதனை தொடர்ந்து சண்முகம் சாலையில் கேப்டன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் உடன் ரகுபதி, ரமேஷ், மணி, கவின் குமார், கணேசன், சக்திவேல், விஜயகுமார், ஜார்ஜ் பகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment