பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை - MAKKAL NERAM

Breaking

Sunday, September 15, 2024

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை



தாம்பரம் மாநகரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்..ராஜா எம்எல்ஏ அவர்களின் ஆலோசனைக்கிணங்க, 4வது மண்டல குழு தலைவரும், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளருமான டி.காமராஜ், 5வது மண்டல குழு தலைவரும், தாம்பரம் மேற்கு  பகுதி செயலாளருமான எஸ்.இந்திரன் ஆகியோர் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள் இந்நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் கி.வேல்மணி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment