கசந்த கள்ளக்காதல்..... கடைக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் - MAKKAL NERAM

Breaking

Saturday, December 28, 2024

கசந்த கள்ளக்காதல்..... கடைக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன்

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பஷிரா பேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். பஷிரா பேகம் சரவணப்பொய்கை சாலையில் டீக்கடை மற்றும் துணி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் வழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சமீப காலமாக அந்த பெண் மாரிமுத்து உடன் பேசாமல் வேறு ஒரு நபருடன் பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மாரிமுத்து கடையில் இருந்த பஷிரா பேகத்திடம் தகராறு செய்து அவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் பஷிரா பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மாரிமுத்துவுக்கும் கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பேகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment