• Breaking News

    தாம்பரத்தில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ் கே.ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக  திராவிட சிந்தனை பேச்சாளர் பா.நாஞ்சில் சம்பத், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் எம்.சி, கண்டன உரையாற்றினார்கள்.தாம்பரம் ஜிம்.ஆ பள்ளிவாசலில் இருந்து சண்முகம் சாலை பாரதி திடலுக்கு பேரணியாக ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

    மமக காஞ்சி மாவட்ட தலைவர் ஜே.சலீம் கான், தமுமுக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பாருக் அகமது, காஞ்சி மாவட்டச் செயலாளர் எம்.அமீர்கான் மற்றும் தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை ஆற்றினார்கள்.

    செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். மேலும்  நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.கே.நாகூர் கனி, மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், தி.க. தாம்பரம் மாவட்ட தலைவர் பா.முத்தையன், மற்றும் மமக மாவட்ட பொருளாளர் எம்.சபியுல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.அப்துல் ரவூப், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், மாநில வர்த்தக அணி செயலாளர் ஏ.கெளஸ் பாஷா, மாநில தொழிற்சங்க அணி செயலாளர் ஏ.சாதிக் பாஷா, மாநில தொழிற்சங்க அணி பொருளாளர் ஏ.ஆஷிக் ஹமீது, மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி துணைச் செயலாளர் எஸ்.முகம்மது நயினார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஏ.முகம்மது ஜமில், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் ரஹ்மத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். ஜிந்தாமதார், எஸ்எம்ஜ.மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.என்.அப்துல் ரகுமான், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, கபீர் கான், என்.மன்சூர் அலிகான், ஏ.முகமது யூனுஸ், ஜே.ஜமால் மற்றும் மாவட்ட, பகுதி,ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

    இறுதியாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் காதர் நன்றி உரையாற்றினார்.

    No comments