• Breaking News

    பொன்னேரி: அருமந்தை ஊராட்சியில் ரூ.31.4 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்காக எம்எல்ஏ பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருமந்தை ஊராட்சி மன்ற கட்டிடம் சிதிலமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 31.4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. 

    பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் சோழவரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஞாயிறு வே.ஆனந்தகுமார், வரவேற்பு அளித்தார் . சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆரணி அன்புவாணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர், சோழவரம் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் யாஸ்மின், அருமந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விக்ரமன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருமந்தை செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன், பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் மா. தீபன், ஞாயிறு சுதாகர், ஞாயிறு பூபாலன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வழுதிகை சந்துரு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிறுவாபுரி சந்திரசேகர், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரமேஷ், காங்கிரஸ் கமிட்டி மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், சோழவரம் வட்டார தலைவர் ஜெகநாதபுரம் மணிகண்டன், பழவேற்காடு ஜெயசீலன், புது குப்பம் காந்தி, புதுப்பாக்கம் எம்.ஆர்.என்.தரணி, ஞாயிறு இளங்கோ, ஞாயிறு சதீஷ்,மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அருமந்தை ஊராட்சி திமுக கிளை கழக செயலாளர்கள், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments