• Breaking News

    சிவநாடானூர் ஊராட்சியில் ரூ.54 லட்சத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தொடங்கி வைத்தார்.....


    சிவநாடானூர் ஊராட்சியில் ரூ.54 லட்சத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தொடங்கி வைத்தார்.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சத்தில் பல்வேறு  பணிகள் நடைபெறவுள்ளது. இதில் மடத்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இரா.சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர் அருமை கண்ணன் முன்னிலை வகித்தனர். யூனியன் துணை சேர்மன் முத்துகுமார் வரவேற்றார்.

    யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி, அரசு ஒப்பந்ததாரர் தளபதி விஜயன் மற்றும் வார்டு உறுப்;பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    No comments