நம்பியூரில் கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, June 26, 2025

நம்பியூரில் கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது


ஈரோடு மாவட்டம் ,நம்பியூர் கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழு மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள்( BLA -2 ) கூட்டம் நம்பியூர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் எம்.பி.பெரியசாமி தலைமையில்,நம்பியூர் கிழக்கு ஒன்றிய திமுக  பொறுப்பாளரும் , நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர்  மெடிக்கல்.ப.செந்தில்குமார்  முன்னிலையில்,நம்பியூர் சிவசக்தி திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வாக்குச்சாவடி வாரியாக வழங்கியும்,2026 - சட்டமன்றத் தேர்தலில் களப்பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்றும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

நிகழ்வின் போது தலைமை பொது குழு உறுப்பினர் கீதா முரளி , மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.சி.சண்முகம் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் S.S (எ) சண்முகசுந்தரம் , மாவட்ட பிரதிநிதி பி.வி.இளங்கோ , மாவட்ட துணை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் ஜே.வி முருகசாமி , பங்க் ரமேஷ் செல்வன் , ஒன்றிய கழக துணைச் செயலாளர் வேலுச்சாமி  மற்றும் BLA-2, BLC, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக, வார்டு கழக, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment