• Breaking News

    திருக்குவளை அருகே திருவாய்மூர் ஶ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்


    திருக்குவளை ஸ்தவிடங்களில் ஒன்றான  ஶ்ரீ திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகர் சுவாமி  அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

     நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூர்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவர்கள் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு திருக்கல்யாண உற்சவம் தங்கப்பா குருக்கள் தலைமையிலான ஸ்தலகுரு பிச்சைமணி சிவாச்சாரியார்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து  மணக்கோலத்தில் சந்திரசேகர் சுவாமி  அல்லியங்கோதை அம்பாள் மாலை மாற்றும் வைபோகம் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து திருக்கல்யாணம் உற்சகத்தை தரிசனம் செய்தனர்.

     பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சுவாமி அம்பாள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் வடை பாயசத்துடன் கூடிய  அன்னதானம் வழங்கப்பட்டது.

    கீழ்வேளூர் தாலுகா நிருபர்  த.கண்ணன் 

    No comments