• Breaking News

    இராமநாதபுரம்: மண்டபம் வட்டாரத்தில் ஆண்டு செயல் திட்டம் பயிற்சி - 2 நடைபெற்றது


     இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்  முன் மாதிரி  வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை  ஆண்டு செயல் திட்டம் 2025 - 2026 க்கான மூன்று கட்டமாக பயிற்சி நடைப்பெற்றது.  பின்பு ஆண்டு செயல் திட்டம் முதற்கட்ட பயிற்சி தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சி   மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 08.07.2025 முதல் 11.07.2025 வரை 4 நாட்கள் நடைப்பெற்றது.

     இதில் திட்ட இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்  வழிகாட்டுதலின்படி உதவி திட்ட அலுவலர் சத்யா அறிவுரையின்படி பயிற்சி நடைபெற்றது.  மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் மணிமாலா தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் அங்கையர் கண்ணி வரவேற்று பேசினார் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் (பயிற்சிகள்) ஸ்ரீரங்கபாணி ஆண்டு செயல் திட்டம் பயிற்சி அளித்தார் இதில் சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு  நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது.  கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு,உரிமைகள் நிறுவனங்கள் மேம்பாடு சமூக மேம்பாடு , ஜூஹாரி விண்டோ மாற்றத்திற்கான கூட்டமைப்பு கோட்பாடு,BLF, PLF மறுசீரமைப்பு  தேர்வு செய்யும் முறை நேரடியாக பயிற்சிகள் நினைவு கூறப்பட்டது.

    பரிமாணங்கள் கொண்டு 2025 - 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் இலக்கு மற்றும் பொறுப்புகள் கொண்டு இந்த ஆண்டு  செயல் திட்டம் பயிற்சி பணியாளர்களுக்கு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் , சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் சமுதாய வள பயிற்றுநர்கள் கணக்காளர்களுக்கு பயிற்சி நான்கு நாட்கள் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த ஊராட்சியின் அடிப்படையில் தேவைகளை கண்டறிந்து ஆண்டு செயல்திட்டம் முடிக்கப்பட்டது.அனைத்து தகவல்களையும் வட்டார இயக்க மேலாளர் மணிமாலா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

    No comments