• Breaking News

    ஏவிசி கல்லூரி ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில் பாட்டுப் போட்டி நடைபெற்றது


    மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆங்கிலத்துறையில் ஆங்கில இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் . நாகராஜன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன், இணை பேராசிரியர் டாக்டர் எம். வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம். கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை பெண்கள் உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை டி. லீலாவதி, குட் ஷெப்பர்ட் பள்ளி தாளாளர் ஜி. சாலமன் தேவராஜ் , பேராசிரியை ஆர்.மல்லிகா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேசபக்தி பாடல்கள், பக்தி பாடல்கள், கர்நாடக இசை , ஆங்கில பாடல்கள்,  ஆகியவற்றை மாணவர்கள் பாடி காட்டினார்.

     மாணவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தங்களுக்கான பாடத்திட்டத்தோடு தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.  தனி பாடல்கள் பிரிவில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் ஜெ.ஜோன்ஸ் ரோஹித் முதலிடமும் , முதலாம் ஆண்டு ஆங்கிலம் தியாகு, இரண்டாம் இடமும் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் மாலை நேர பிரிவு ஜோயல் ஜோசப் மூன்றாம் இடமும். குழு பாடல் போட்டியில் ஐயப்பன் மற்றும் குழுவினர் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் மாலை நேர பிரிவு முதலிடமும் விஷ்ணு பிரியா மற்றும் குழுவினர் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் இரண்டாம் இடமும், தரணி பாவனா குழுவினர் இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் மாலை நேர பிரிவு மூன்றாம் இடமும் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஆறுதல் பரிசு முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ஆஸ்லி இஸ்ரவேல் வழங்கப்பெற்றது. இதில் திரளான மாணவர்கள், பிறத்துற பேராசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பேராசிரியை ஏ .கனிமொழி வாழ்த்து செய்திகளை வாசித்தார்.

    No comments