• Breaking News

    முதலமைச்சர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

     


    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்திய நிலையில், முதல்-அமைச்சர் அங்கு தங்கியுள்ளார். இதற்கிடையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தநிலையில், முதல்-அமைச்சர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments